Saturday, July 26, 2025
26.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாணவி படுகொலை: சந்தேக நபர் கைது

மாணவி படுகொலை: சந்தேக நபர் கைது

கொழும்பு குதிரை பந்தய திடலில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் வெட்டுக்காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டார்.

அவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் பல்கலைக்கழக மாணவர் ஒருவர் வெல்லம்பிட்டிய பகுதியில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவர் மேலதிக விசாரணைகளுக்காக குருந்துவத்தை பொலிஸாரிடம் அழைத்து வரப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இன்று (17) பிற்பகல் கொழும்பு குதிரை பந்தய திடலில் படுகொலை செய்யப்பட்ட யுவதி தொடர்பில் மேலும் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

யுவதி 24 வயதுடைய பல்கலைக்கழக மாணவி எனவும் விஞ்ஞான பீடத்தின் மூன்றாம் வருடத்தில் பயின்று வந்ததாகவும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles