Thursday, April 16, 2026
33.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇராணுவ வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை

இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை

இலங்கை அரசாங்கம் இராணுவக் குறைப்பை மேற்கொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் இதனை அறிவித்துள்ளார்.

தற்போது இலங்கையில் 200,788 இராணுவத்தினர் இருக்கின்ற நிலையில், 2024ம் ஆண்டு அந்த எண்ணிக்கை 130,000ஆக குறைக்கப்படவுள்ளது.

2030ம் ஆண்டாகும் போது இலங்கை இராணுவத்தின் எண்ணிக்கை 100,000ஆக குறைக்கப்படும் என்றும் இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் பாதுகாப்பு செலவினங்களுக்கான ஒதுக்கம் மற்றும் இராணுவ எண்ணிக்கை தொடர்பாக நீண்டகாலமாக தமிழ் அரசியல் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles