Wednesday, September 17, 2025
27.2 C
Colombo
செய்திகள்உலகம்சவுதி அரேபிய சட்டத்தை மீறினார் ரொனால்டோ

சவுதி அரேபிய சட்டத்தை மீறினார் ரொனால்டோ

போர்ச்சுகலின் தலைசிறந்த கால்பந்து வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ மீது தற்போது உலகின் கவனம் குவிந்துள்ளது.

அதற்கு காரணம் அவர் சவுதி அரேபியாவில் ஒரு சிறப்பு சட்டத்தை மீறியதே ஆகும்.

ரொனால்டோ மற்றும் அவரது காதலி ஜோர்ஜினா ரோட்ரிகஸ் இருவரும் சேர்ந்து வாழந்தாலும், அவர்கள் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொள்ளவில்லை.

ரொனால்டோ தற்போது சவுதி அரேபியாவில் வசித்து வருகிறார்.

ரொனால்டோ சவுதி அரேபியாவில் உள்ள அல் நாசர் ஸ்போர்ட்ஸ் கிளப்புடன் ஒப்பந்தம் செய்ததால் சவுதி அரேபியா சென்றார்.

சவுதி அரேபிய சட்டத்தின்படி, திருமணமாகாத தம்பதிகள் ஒரே வீட்டில் வசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனினும் ரொனால்டோ இந்த சட்டத்தை மீறினாலும் சவுதி அரசினால் தண்டிக்கப்பட மாட்டார் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அல் நாசர் விளையாட்டுக் கழகத்துடன் 2025ஆம் ஆண்டு வரை ஒப்பந்தம் செய்துள்ளதாக வெளிநாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles