Sunday, July 27, 2025
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவர்த்தகரை அச்சுறுத்தி கப்பம் கோரிய சந்தேகநபர் கைது

வர்த்தகரை அச்சுறுத்தி கப்பம் கோரிய சந்தேகநபர் கைது

மாத்தறை – மிதிகம பிரதேசத்தில் வர்த்தகரை அச்சுறுத்தி 250,000 ரூபா கப்பம் கோரி நுழைவாயில் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்திய சந்தேகநபரொருவரை மிதிகம பொலிஸார் கைது செய்துள்ளனர்.

சந்தேகநபர் கைது செய்யப்பட்டபோது அவரிடம் இருந்து 3,210 மில்லிகிராம் ஹெரோயினும் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கடந்த வருடம் ஒக்டோபர் 5 ஆம் திகதி மிதிகம பிரதேசத்தில் வர்த்தகர் ஒருவரை அச்சுறுத்திக் கப்பம் கோரியதுடன், வீட்டின் முன்பக்க வாயில்மீது துப்பாக்கிச் சூடு நடத்திய சம்பவத்தில் இரண்டாவது சந்தேக நபரென அவர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் வெலிகமஇ இப்பவல பிரதேசத்தில் மறைந்திருந்த நிலையில் நேற்று (7) கைது செய்யப்பட்டுள்ளார்.

23 வயதான சந்தேகநபர் இப்பாவில பிரதேசத்தை சேர்ந்தவரென தெரியவந்துள்ளது.

அவரை மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles