Saturday, September 20, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமுட்டை கொள்வனவுக்கு இந்திய ரூபாவை பயன்படுத்த அவதானம்

முட்டை கொள்வனவுக்கு இந்திய ரூபாவை பயன்படுத்த அவதானம்

டொலர் கையிருப்பு குறைவடைந்துள்ளமையினால், முட்டை கொள்வனவு செய்ய இந்திய ரூபாவை பயன்படுத்துவதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தி வருகின்றது.

அதேநேரம்இ முட்டை இறக்குமதிக்காக சர்வதேச விலை அடிப்படையிலான விலை மனு கோரல் நடவடிக்கை இன்றுடன் இறுதி செய்யப்படும் என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ அண்மையில் தெரிவித்தார்.

முட்டை இறக்குமதி தொடர்பான பணிகள் அரச வர்த்தக கூட்டுத்தாபனத்தின் ஊடாக முன்னெடுக்கப்படும் நிலையில், 20 மில்லியன் முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அதன் தலைவர் ஆசிரி வலிசுந்தர தெரிவித்துள்ளார்.

அதில் முதல் கட்டமாக 5 மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, இந்தியாவின் தமிழ்நாட்டில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதால், டொலருக்கு பதிலாக இந்திய ரூபாவை பயன்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டு வருகின்றது.

எவ்வாறாயினும், 50 ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியாவில் முட்டையின் விலை அதிகரித்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இன்று (09) முதல் ஒரு முட்டை 5 ரூபா 65 சதத்துக்கு (இந்திய ரூபா ) விற்பனை செய்யப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles