காலிமுகத்திடல் போராட்டத்தின் செயற்பாட்டாளர் ரந்திமால் கமகேவை பிணையில் விடுவிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இலங்கை தொலைக்காட்சி கூட்டுத்தாபனத்திற்குள் அத்துமீறி நுழைந்து அதன் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முற்படுத்தப்பட்டிருந்தார்.
சந்தேக நபர் இன்று (05) டுபாயில் இருந்து இலங்கைக்கு திரும்பிய போது கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.