கொழும்பின் பல பகுதிகளுக்கு 18 மணிநேர நீர் விநியோகத்தடை மேற்கொள்ளப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, கொழும்பு 01, 02, 03, 04, 07, 09, 10 மற்றும் கொழும்பு 11 ஆகிய பகுதிகளில் இவ்வாறு நீர் விநியோகத்தடை மேற்கொள்ளப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் சனிக்கிழமை(7) இரவு 10.00 மணி முதல் மறுநாள் ஞாயிற்றுக்கிழமை(8) மாலை 4 மணிவரை நீர் விநியோகத்தடை மேற்கொள்ளப்படும் என நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை குறிப்பிட்டுள்ளது.