Thursday, May 22, 2025
32 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாடாளுமன்றத்தில் 35 பேர் ஓய்வு பெற்றனர்

நாடாளுமன்றத்தில் 35 பேர் ஓய்வு பெற்றனர்

நாடாளுமன்றத்தின் 35 அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கடந்த 31ஆம் திகதி ஓய்வு பெற்றதாக நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசு ஊழியர்களின் ஓய்வு வயதை 60 ஆகக் கட்டுப்படுத்த அரசு தீர்மானித்தது.

அதன்படி நாடாளுமன்றத்தில் உள்ள இந்த குழுவினர் ஓய்வு பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த காலங்களில் இந்த அதிகாரிகளும் ஊழியர்களும் தமது கடமை காலத்தை நீட்டிக்க சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும் அது தோல்வியடைந்தது.

இது தொடர்பில் நர்தளுமன்றத்தில் கருத்து வெளியிட்ட நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய, இந்த விடயத்தில் நாடாளுமன்றத்துக்கு சிறப்பு சலுகை வழங்கப்பட்டால் அரச சேவையில் பெரும் குழப்பம் ஏற்படலாம்.

எனவே, நாடாளுமன்ற அதிகாரிகள் மற்றும் ஊழியர்களுக்கு மட்டும் விசேட சேவை நீடிப்பு வழங்க முடியாது எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles