Saturday, January 31, 2026
26.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரச ஊழியர்களுக்கு விசேட முற்பண கொடுப்பனவு

அரச ஊழியர்களுக்கு விசேட முற்பண கொடுப்பனவு

அரச உத்தியோகத்தர்களுக்கான விசேட முற்பணத் தொகையான 4,000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நடவடிக்கை இன்று (02) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விசேட முன்பணத்தை செலுத்துவது தொடர்பான சுற்றறிக்கை அரச நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ளது.

அரச ஊழியர்களுக்கு அடுத்த மாத இறுதி வரை கொடுப்பனவைப் பெற்றுக் கொள்ள வாய்ப்பு உள்ளதாக உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த தெரிவித்துள்ளார்.

பெப்ரவரி 28 ஆம் திகதிக்கு பின்னர் பணம் செலுத்த அனுமதிக்கப்படாது என்றும், 2023 ஆம் ஆண்டுக்குள் உரிய பணத்தை வசூலிக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles