Wednesday, July 23, 2025
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇங்கிரிய கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது

இங்கிரிய கொலை சம்பவத்துடன் தொடர்புடைய மூவர் கைது

இங்கிரிய – நம்பபான பிரதேசத்தில் நபரொருவரைக் கொன்று காரை கொள்ளையடித்த சம்பவம் தொடர்பில் மூன்று சந்தேகநபர்கள் அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த 14ஆம் திகதி இரத்தினபுரியில் இருந்து வாடகை அடிப்படையில் எடுத்துச் செல்லப்பட்ட காரில் பயணித்த போது, ​​சாரதி தாக்கப்பட்டு, கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.

பின்னர் பாணந்துறை பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினரும் அலுபோமுல்ல பொலிஸாரும் விசாரணைகளை ஆரம்பித்ததுடன், நேற்று (29) அம்பலாந்தோட்டை மற்றும் ஹங்கம பிரதேசங்களில் வசிக்கும் 31 மற்றும் 36 வயதுடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருடப்பட்ட கார், கொலை செய்யப்பட்ட நபர் பயன்படுத்திய 2 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 3 கையடக்கத் தொலைபேசிகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles