Friday, September 20, 2024
31 C
Colombo
செய்திகள்உள்நாட்டுநாட்டின் சில பகுதிகளுக்கு இன்று நீண்ட நேர மின்வெட்டு

நாட்டின் சில பகுதிகளுக்கு இன்று நீண்ட நேர மின்வெட்டு

இன்றைய தினமும் நாடளாவிய ரீதியில் சுழற்சி முறையில் மின்துண்டிப்பை அமுலாக்குவது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கமைய, A முதல் L வரையான வலயங்களில், காலை 8 மணிமுதல் மாலை 6 மணிவரையான காலப்பகுதியில், 3 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும், மாலை 6 மணிமுதல் இரவு 11 மணிவரையான காலப்பகுதியில் ஒரு மணித்தியாலமும் 40 நிமிடங்களும் மின்துண்டிப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.

அத்துடன், P முதல் W வரையான வலயங்களில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரையான காலப்பகுதியினுள் இரண்டு மணித்தியாலங்களும், மாலை 5 மணிமுதல் இரவு 10 மணிவரையான காலப்பகுதியினுள் ஒரு மணித்தியாலமும் 15 நிமிடங்களும் மின்சாரத்தை துண்டிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

மின்வெட்டு அமுலாகும் விதம்

Keep exploring...

Related Articles