Monday, June 22, 2026
27.2 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரிசி களஞ்சியசாலைக்கு சீல் வைப்பு

அரிசி களஞ்சியசாலைக்கு சீல் வைப்பு

ஏக்கல பிரதேசத்தில் உள்ள அரிசி களஞ்சியசாலையொன்றை நுகர்வோர் அதிகார சபையினர் சோதனையிட்டுள்ளனர்.

கால்நடை தீவனத்திற்காக பயன்படுத்தப்படும் 21 மெற்றிக் டன் அரிசி அங்கு காணப்பட்டதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டுஇ கால்நடைத் தீவனத்திற்கு உள்ளூர் அல்லது இறக்குமதி செய்யப்பட்ட அரிசியைப் பயன்படுத்துவதைத் தடைசெய்து அரசாங்கம் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டது.

மேலும் கிடங்கின் பொறுப்பாளர்கள் உத்தரவை மீறி இந்த அரிசியை கால்நடை தீவனத்திற்கு பயன்படுத்தியதால் கிடங்கிற்கு சீல் வைக்கப்பட்டது.

1977 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles