Saturday, July 5, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகணவரின் தாக்குதலில் மனைவி பலி

கணவரின் தாக்குதலில் மனைவி பலி

வாரியபொல – பமுனகொட்டுவ பகுதியில் நபர் ஒருவர் தனது மனைவியைத் தாக்கிக் கொலை செய்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குடும்ப தகராறு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக குறித்த பெண்ணை அவரது கணவர் கட்டையால் தாக்கியுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் பின்னர், குறித்த பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்தில் 55 வயதுடைய தம்பேலியத்த, பமுனகொட்டுவ பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை வாரியபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles