இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவிற்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் இராஜதந்திர கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் விசாரணை செய்யுமாறு இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் இன்று முறைப்பாடு செய்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் கமகே பிரித்தானிய பிரஜாவுரிமையை வைத்திருப்பதாகவும் அதனால் இராஜதந்திர கடவுச்சீட்டை வழங்குவது குடிவரவு மற்றும் குடியகல்வு சட்டத்திற்கு எதிரானது எனவும் ஹேரத் தெரிவித்துள்ளார்.
இவ்வாறான நடவடிக்கையானது அதிகார துஷ்பிரயோகம் எனவும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழு உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவின் குடியுரிமையை சவாலுக்கு உட்படுத்தும் பல மனுக்கள் தற்போது விசாரிக்கப்பட்டு வருகின்றன.