இலங்கை மத்திய வங்கி அண்மையில் 64 பில்லியன் ரூபாவை அச்சிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
உள்நாட்டுக் கடனை அடைப்பதற்குப் போதியளவு பத்திரங்களை விற்பனை செய்யாத காரணத்தினால் இந்தப் பணம் அச்சிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
160 பில்லியன் ரூபா வருமானம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட பிணைமுறி ஏலத்தின் மூலம் இலங்கை மத்திய வங்கிக்கு 124 பில்லியன் ரூபாவையே ஈட்ட முடிந்தது.
அதன் காரணமாக மேலும் 64 பில்லியன் ரூபா அச்சிடப்பட்டுள்ளது.