வெளிநாட்டவர்களை திருமணம் செய்யும் இலங்கை பிரஜைகள் பதிவாளர் நாயகத்தின் அனுமதி கட்டாயம் பெற வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வருடம் சுமார் 1800 வெளிநாட்டவர்கள் இலங்கையர்களை திருமணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கைப் பெண்கள் திருமணம் செய்துகொண்டு வெளிநாடுகளில் வேறு சட்டவிரோதச் செயல்களில் ஈடுபடுத்தப்படுவதாக பாதுகாப்பு அமைச்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்தது.
திருமண வயது வரம்பை உயர்த்துவது குறித்தும் திணைக்களம் கவனம் செலுத்தியுள்ளது.
அதன்படி, திருமணப் பதிவாளர் சட்டத்தில் திருத்தம் செய்ய பிரதமர் தயாராகி வருவதாக பதிவாளர் நாயகம் பிரபாத் அபேவர்தன தெரிவித்துள்ளார்.
