Monday, March 16, 2026
31.7 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇலங்கை - இந்தியாவுக்கு இடையில் படகுச் சேவை

இலங்கை – இந்தியாவுக்கு இடையில் படகுச் சேவை

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் பயணிகள் படகு சேவையை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என துறைமுகங்கள், கப்பல் மற்றும் விமான போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

அதன்படி, இத்திட்டத்தின் முதற்கட்டமாக,கொழும்பு துறைமுகத்திலிருந்து காங்கேசன்துறைக்கும் பாண்டிச்சேரிக்கும் இடையிலான பயணிகள் படகுச் சேவை (Feri) எதிர்வரும் ஜனவரி மாதத்தில் ஆரம்பிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.

தம்பதிவ யாத்திரைக்கு செல்லும் இலங்கை பக்தர்களுக்கும் வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்களுக்கும் இந்த பயணிகள் படகு சேவை பெரும் நிவாரணமாக அமையும் என அமைச்சர் வலியுறுத்தினார்.

ஒரு பயணத்திற்கு பயணியொருவரிடமிருந்து சுமார் 60 அமெரிக்க டொலர்கள் அறவிடப்படும் எனவும், 100 கிலோ எடையுள்ள பொருட்களை கொண்டு செல்ல முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles