Friday, July 18, 2025
29.5 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஇந்தியாவுக்கு தப்பிச்சென்று நாடு திரும்பிய இலங்கையர்கள் இருவர் கைது

இந்தியாவுக்கு தப்பிச்சென்று நாடு திரும்பிய இலங்கையர்கள் இருவர் கைது

இந்தியா மண்டபம் முகாமில் இருந்து தப்பி வந்த இலங்கையைச் சேர்ந்த இருவர் இன்றையதினம் வேலணை கடற்கரையில் வைத்து கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த நபர்கள் இருவரும் இலங்கையில் இருந்து சென்று இந்தியா மண்டபம் முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் இன்று காலை இருவரும் அங்கிருந்து தப்பித்து கடல் மார்க்கமாக மீண்டும் இலங்கையை வந்தடைந்தனர்.

இதன்போது இலங்கை கடற்படையினரால் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்கள் கடற்படையினரின் விசாரணைகளின் பின்னர் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் பாரப்படுத்தப்பட்டனர்.

இருவரையும் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles