ரயில்வே திணைக்களத்தை அதிகார சபையாக மாற்றினால் தொழில் ரீதியாக நடவடிக்கை எடுக்க அதன் தொழிற்சங்கங்கள் தீர்மானித்துள்ளன.
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன, ஊழியர்களின் கருத்தைக் கேட்காமல் திணைக்களத்தை அதிகாரசபையாக மாற்றுவதற்கான திட்டங்களை வகுத்து வருவதாக ரயில்வே தொழில்நுட்ப வல்லுநர்கள் சங்கத் தலைவர் எச்.ஆர்.பி. உதயசிறி தெரிவித்துள்ளார்.