Saturday, July 5, 2025
28.4 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமாணவனை தீ வைத்து காயப்படுத்திய சந்தேகநபருக்கு விளக்கமறியல்

மாணவனை தீ வைத்து காயப்படுத்திய சந்தேகநபருக்கு விளக்கமறியல்

கண்டி – அம்பிட்டிய – மீகனுவ பிரதேசத்தில் வெளிவந்த கல்விப் பொதுத்தராதர சாதாரணப் பரீட்சையில் 9 A சித்திகளை பெற்ற 17 வயதான மாணவர் மீது தீ வைத்து காயப்படுத்திய சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் கைதானவர் கண்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது, அவரை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேகநபர் கைதான போது, அவரது பாதத்தில் காயம் ஏற்பட்டிருந்தமையினால், தற்போது அவர் கண்டி பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

கைதானவர் பெத்தும் எனப்படும் மலித் நிஸ்ஸங்க சஞ்ஜீவ தென்னக்கும்புர பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவர் என காவல்துறை தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles