அடுத்த வருடம் இரண்டு கட்டங்களாக மின்சார கட்டணத்தை அதிகரிக்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது.
மின்சார கட்டணத்தை 70%ஆல் அதிகரிக்க இலங்கை மின்சார சபை கோரிக்கை விடுத்துள்ளது.
அமைச்சரவை தீர்மானத்தின்படி, அடுத்த ஆண்டு ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் மின்சார கட்டணம் அதிகரிக்கப்படும்.
இதேவேளை, மின் கட்டண அதிகரிப்பு குறித்து இப்போது அவதானம் செலுத்தப்படவில்லை என பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.