எரிவாயு விநியோகம் நாளை முதல் முழு வீச்சில் இடம்பெறும் என லிட்ரோ நிறுவனம் அறிவித்துள்ளது.
இன்று 6000 மெட்ரிக் டன் எரிவாயு அடங்கியக் கப்பல் ஒன்று துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
அதிலிருந்து எரிவாயுவைத் தரையிறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
நாளை (01) முதல் 100,000. எரிவாயு சிலிண்டர்கள் வீட்டுப்பாவனைக்காக நாடுமுழுவதும் விநியோகிக்கப்படும் என லிட்ரோ அறிவித்துள்ளது.