யாழ்ப்பாணத்தில் ஊசி மூலம் ஹெரோயின் பயன்படுத்திய 15 வயது பாடசாலை மாணவன் ஒருவர் மூளை மற்றும் இதயத்தில் கிருமித்தொற்று ஏற்பட்டு உயிரிழந்துள்ளார்.
இவ்வாண்டு குறித்த சிறுவன் உட்பட 13 பேர் யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் பயன்பாட்டால் உயிரிழந்துள்ளனர்.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியொன்றில் வசிக்கும் 15 வயது மாணவன் கடும் காய்ச்சல் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் கடந்த வாரம் சேர்க்கப்பட்டுள்ளார்.
அவசர சிகிச்சைப் பிரிவில் வைத்து சிகிச்சையளிக்கப்பட்டபோதும் நேற்று முன்தினம் அந்த மாணவன் உயிரிழந்துள்ளார்.
மாணவனின் சடலத்தை நீதிவான் நேரில் சென்று பார்வையிட்டு விசாரணைகளை மேற்கொண்டார்.
ஹெரோயினை ஊசி மூலம் இந்த மாணவன் பயன்படுத்தி வந்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.