ஹிக்கடுவை – வேவல சந்தியில் இன்று (30) ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டுள்ளனர்.
படுகாயமடைந்த ஆண் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்த பெண் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார்.
மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.