2023ஆம் ஆண்டு இலங்கையில் நிலவக்கூடிய சூழ்நிலைகள் தொடர்பாக பிரித்தானியாவில் வெளியாகும் த எக்கனமிஸ்ட் பத்திரிகை ஆரூடங்களை வெளியிட்டுள்ளது.
2024க்கு முன்னர் இலங்கையில் தேர்தல் நடத்தப்படும் எனவும், ஆர்ப்பாட்டங்களை கட்டுப்படுத்த முடியாமல் ஜனாதிபதி சிக்கல்களை எதிர்கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், போராட்டங்களும் வேலை நிறுத்தங்களும் அதிகரிக்கும்.
நாட்டின் மொத்த தேசிய உற்பத்தி -0.2% ஆகவும், பணவீக்கம் 66.4% ஆகவும் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.