பேருந்து புத்தாக்க வேலைத்திட்டம் அடுத்த வருடம் ஆரம்பிக்கப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் பணிப்பாளர் நாயகம் சி.ஹெட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.
பேருந்துகளுக்கிடையேயான தேவையற்ற போட்டி, போக்குவரத்து விதிகளைக் கடைப்பிடிக்காமை, ஓட்டுநர்கள் மற்றும் உதவியாளர்கள் பயணிகளை துன்புறுத்துகின்றமை, பயணிகளின் ஈர்ப்பில் தொடர்ந்து குறைந்து வரும் பொதுப் போக்குவரத்து சேவை போன்ற பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் இது செயற்படுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.