வெளிவிவகார அமைச்சு பொதுமக்களுக்கு திறமையான சேவையை வழங்குவதற்காக அமைச்சின் தூதரக சேவைகளை பரவலாக்குவதில் கவனம் செலுத்துகிறது.
இதன்படி, தற்போதுள்ள பிராந்திய அலுவலகங்களுக்கு மேலதிகமாக, முக்கிய நகரங்களுக்கு சேவையை மேலும் பரவலாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது 2023 செயற்திட்டத்தின் படி செயற்படுத்தப்பவுள்ளது.
இதனை வெளிவிவகார அமைச்சின் தூதரகப் பிரிவின் பணிப்பாளர் பிரிகயாங்கிகா விஜயகுணசேகர தெரிவித்துள்ளார்.