தொலைபேசி மற்றும் டேட்டா கட்டணங்களுக்கு நிவாரணம் வழங்குவது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று (28) இடம்பெற்ற வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார்.
தொலைபேசி மற்றும் டேட்டா கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளமை மக்களுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.