இறக்குமதி செய்யப்பட்ட நுகர்வுக்கு பொருத்தமற்ற பால்மாவாக மாறியதால், அதனை விலங்கு தீவனமாக வழங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஜூலை மாதம் இறக்குமதி செய்யப்பட்ட 4 கொள்கலன்களில் இருந்த 100,000 கிலோகிராம் பால்மா இவ்வாறு விலங்கு தீவனத்துக்கு வழங்கப்படவுள்ளது.
சுங்க அதிகாரிகள் சிலர் குறித்த கொள்கலன்களை விடுவிப்பதற்கு இலஞ்சம் கோரிய போதிலும் அது வழங்கப்படாமையில் அந்த அதிகாரிகள் அவற்றை விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை என இறக்குமதியாளர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனினும் இதனை மறுத்துள்ள சுங்கப் பேச்சாளர் சுதத்த சில்வா, கொள்கலன்களை விடுவிப்பதில் பிரச்சினை காணப்படுமாயின் ஏற்றுமதி இறக்குமதி கட்டுப்பாட்டு திணைக்களத்தின் ஊடாக தீர்த்திருக்க முடியும் என தெரிவித்துள்ளார்.
#Srilanka Mirror