SLFPயின் செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டமை தொடர்பில் தமக்கு உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
நேற்று நடைபெற்ற சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திலங்க சுமதிபால அதே பதவிக்கு நியமிக்கப்பட்டமை தொடர்பில் கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் 9 சிரேஷ்ட உறுப்பினர்கள் கட்சி உறுப்புரிமையும் நேற்று இடம்பெற்ற சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவில் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.