அரச ஊழியர்கள் இலகுவான மற்றும் கண்ணியமான உடையில் பணிக்கு செல்லலாம் என அண்மையில் சுற்றறிக்கை வெளியிடப்பட்டது.
இதனை அடுத்து பாடசாலை ஆசிரியர்கள் பலர் சேலை தவிர்ந்த ஏனைய வகையான ஆடைகளுடன் பாடசாலைகளுக்கு சென்றிருந்தனர்.
ஆனால் இந்த சுற்றறிக்கை பாடசாலை ஆசிரியர்களுக்கு பொருந்தாது என்று அரச நிர்வாக மற்றும் உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.
அத்துடன், விதியை மீறிய ஆசிரியர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் பதில் அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் சாந்த பண்டார தெரிவித்தார்.