Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுசிறைச்சாலைகளில் இடப்பற்றாக்குறை

சிறைச்சாலைகளில் இடப்பற்றாக்குறை

சிறைக் கைதிகளின் எண்ணிக்கை மீண்டும் அதிகரித்துள்ளது.

ஐஸ் போதைப்பொருள் தொடர்பான சட்டங்கள் கடுமையாக்கப்படுவதாலும், அது தொடர்பான சந்தேக நபர்களின் விளக்கமறியல் நாளாந்தம் அதிகரித்து வருவதாலும் இந்நிலை ஏற்பட்டுள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

அபின் மற்றும் விஷ போதைப்பொருள் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படுவதன் மூலம் தினமும் சுமார் 400 ஐஸ் போதைக்கு அடிமையானவர்கள் விளக்கமறியலில் வைக்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

சிறைகளில் உள்ள கைதிகளின் எண்ணிக்கை தற்போது 26,000 ஐ தாண்டியுள்ளதாகவும், கூட்ட நெரிசலைக் குறைக்க அவசர நடவடிக்கைகள் தேவை என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles