ட்விட்டர் நிறுவனத்தின் அலுவலகங்களை தற்காலிகமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பபடுகிறது.
உடன் அமுலாகும் வகையில் இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுகிறது.
இது குறித்து டுவிட்டர் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதோடு எதிர்வரும் 21ம் திகதி மீள திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான காரணம் வெளியாகவில்லை.
அத்தோடு அலுவலக விடயங்களை சமூக வலைத்தளங்கள் மற்றும் பொது வெளிகளில் கலந்துரையாடுவதை தவிர்க்குமாறு ட்விட்டர் நிறுவனம் தமது பணியாளர்களுக்கு அறிவித்துள்ளது.