மஹிந்த ராஜபக்ஷவின் 77வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று (18) நாரஹேன்பிட்டி அபயராம விகாரையில் விசேட நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்வில் அவ்விகாரையின் தலைவர் வணக்கத்திற்குரிய முருத்தெட்டுவே ஆனந்த தேரர், கங்காராம பணிப்பாளர் கலாநிதி கிரிந்தே அஸ்ஸாஜி தேரர், முன்னாள் அமைச்சர் சமல் ராஜபக்ஷ ஆகியோரும் கலந்துகொண்டனர்.