தென்னாபிரிக்காவின் ஜனாதிபதி சிரில் ரமபோசா இலங்கைக்கான திடீர் விஜயத்தை மேற்கொண்டார்.
இந்தோனேசியாவில் நடைபெற்ற ஜீ20 மாநாட்டில் கலந்து கொண்டுவிட்டு நாடு திரும்பும் வழியில் அவர் இலங்கைக்கு வந்தார்.
கட்டுநாயக்க விமானப்படை மையத்தில் அவர் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து இருதரப்பு உறவுகள் தொடர்பாக கலந்துரையாடினார்.
சிரில் ரமபோசா ஜனாதிபதியாக பதவி ஏற்பதற்கு முன்னர், இலங்கையில் அரசியல் தீர்வை ஏற்படுத்துவது தொடர்பான தென்னாப்பிரிக்க மத்தியஸ்தத்துக்கு தலைமை தாங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.