செய்திகள்உள்நாட்டுயூரியா விநியோகத்தின் போது விவசாயிகளை திட்டும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை

யூரியா விநியோகத்தின் போது விவசாயிகளை திட்டும் அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை

கமநல சேவை நிலையங்களில், யூரியா உரம் விநியோகத்தின் போது, அதிகாரிகள் அல்லது பணியாளர்கள் சேவையில் அலட்சியம், விவசாயிகளுக்கு தொந்தரவு மற்றும் மனதை புண்படுத்தும் வகையில் நடந்து கொண்டால், முறைப்பாடளிக்க விசேட தொலைபேசி எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

தேசிய உர செயலகத்தின் பணிப்பாளர் சந்தன லொகுஹேவாவின் 0718714219 என்ற தொலைபேசி எண்ணெ தொடர்பு கொண்டு முறைப்பாடுகளை மேற்கொள்ள முடியும் என விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

அவ்வாறான உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்கள் தொடர்பில் கிடைக்கப்பெறும் முறைப்பாடுகளை உடனடியாக ஆராய்ந்து தேவைப்பட்டால் அவர்களை பணி இடைநிறுத்தம் செய்யுமாறு விவசாய, அமைச்சின் செயலாளர் குணதாச சமரசிங்கவிற்கு பணிப்புரை விடுத்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles