கடந்த மூன்று மாதங்களில் இலங்கை மின்சார சபை 4,431 கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளது.
இவ்வருடம் ஜூலை முதல் செப்டெம்பர் வரையிலான காலாண்டில் இந்த நட்டம் ஏற்பட்டுள்ளதாக மின்சார சபைக்கு வழங்கப்பட்டுள்ள நிதி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை கடந்த 2021ஆம் ஆண்டு 2,145 கோடி ரூபா நட்டத்தை சந்தித்துள்ளது.