அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச உத்தியோகத்தர்களுக்கான சம்பள அதிகரிப்பு இடம்பெறாத காரணத்தினால் இன்று (16) முதல் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு அரச ஊழியர்கள் தீர்மானித்துள்ளனர்.
கடந்த 2016ஆம் ஆண்டு முதல் அரச ஊழியர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படவில்லை எனவும், அந்த வருடத்தில் 10,000 ரூபா சம்பள அதிகரிப்பு ஏற்பட்டதாகவும் இணை அபிவிருத்தி உத்தியோகத்தர் நிலையத்தின் செயலாளர் தம்மிக்க முனசிங்க தெரிவித்தார்.
எவ்வாறாயினும், கடந்த முதலாம் திகதி அரச ஊழியர்களின் சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பில் நிதியமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும், இந்த சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பில் பரிசீலிப்பதாகவும் அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.