நாட்டை ஸ்திரப்படுத்துவதற்கு தேவையான முன்மொழிவுகள் இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டம் தொடர்பாக மத்திய வங்கி வளாகத்தில் இன்று நடைபெற்ற மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தற்போது குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களின் வாழ்க்கை நிலைமையை பாதுகாப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என மத்திய வங்கியின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.