பகிடிவதை தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடு குறித்து விசாரணை குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபரின் உத்தரவுக்கமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
இதன்படி, பொலிஸ் நிலையங்களில் பெறப்படும் முறைப்பாடுகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு விசாரணைக்காக அனுப்பி வைக்குமாறு பொலிஸ் மா அதிபர் அனைத்து உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கும் அறிவுறுத்தியுள்ளார்.