ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் செப்டெம்பர் மாதம் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான தீர்மானம் ஐ.நா பொதுச் சபையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
மனித உரிமைகள் பேரவையின் தலைவர் தூதுவர் ஃபெடரிகோ வில்லேகாஸ், நியூயோர்க்கில் நடைபெற்ற 77வது பொதுச் சபை அமர்வில் இலங்கை தொடர்பான தீர்மானத்தை முன்வைத்தார்.
‘இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை ஊக்குவித்தல்’ என்ற இந்த தீர்மானம் மீதான வாக்கெடுப்பில் 20 நாடுகள் ஆதரவாகவும் 7 நாடுகள் எதிராகவும் வாக்களித்ததுடன், இந்தியா உள்ளிட்ட 20 நாடுகள் வாக்களிப்பை புறக்கணித்தன.
இந்த தீர்மானத்தை நடைமுறைப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பேரவை 6 மில்லியன் அமெரிக்க டொலர்களை செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்படும்.