Monday, March 16, 2026
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுவிருந்தகமொன்றில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 39 பேர் கைது!

விருந்தகமொன்றில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் 39 பேர் கைது!

வென்னப்புவ பகுதியில் உள்ள விருந்தகம் ஒன்றில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில் போதைப்பொருட்களுடன் 39 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கிடைக்கப்பெற்ற ரகசிய தகவலுக்கு அமைய, நேற்றைய தினம் இந்த சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

கைதானவர்கள் 20 முதல் 30 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்கள், மாரவில நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், நாளைய தினம் வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.


தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles