Tuesday, March 24, 2026
28 C
Colombo
செய்திகள்உள்நாட்டுகோட்டாவின் சார்பில் இனி முன்னிலையாக மாட்டோம் - சட்டமா அதிபர் திணைக்களம்

கோட்டாவின் சார்பில் இனி முன்னிலையாக மாட்டோம் – சட்டமா அதிபர் திணைக்களம்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனு ஒன்று கடந்த 27ஆம் திகதி உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

காலநிலை மாற்றத்தைத் தணிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கத் தவறியமைக்கு எதிராக சுற்றாடல் நீதி மையம், ஜனாதிபதி, மத்திய சுற்றாடல் அதிகார சபை, இலங்கை மின்சார சபை, இலங்கை சூரிய சக்தி அதிகார சபை உள்ளிட்ட பிரதிவாதிகள் பலருக்கு எதிராக இந்த வழக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சார்பில் சட்டமா அதிபர் திணைக்களம் இனி பிரதிநிதித்துவப்படுத்தப்படாது என அத்திணைக்களம் தெரிவித்துள்ளது.

மேலும் உண்மைகளை உறுதிப்படுத்த இந்த வழக்கை ஜனவரி 23, 2023 அன்று மீண்டும் கூட்ட உத்தரவிடப்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles