இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் ஜீப் வண்டியில் மோதுண்டு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நபர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 15ஆம் திகதி புத்தளம் நகரில் இராஜாங்க அமைச்சர் பயணித்த ஜீப் மீது சைக்கிளில் பயணித்த ஒருவர் மோதியுள்ளார்.
விபத்தின் பின்னர் குறித்த நபர் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விபத்தில் 45 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.