நாடாளுமன்ற உறுப்பினர்களின் மருத்துவக் காப்பீட்டை 500 சதவீதம் அதிகரிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர்களின் மருத்துவக் காப்புறுதியை 500 வீதத்தால் அதிகரிக்குமாறு கோரி அமைச்சரவைக்கு முன்மொழிவதற்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தீர்மானித்துள்ளார்.
எம்.பி ஒருவரின் மருத்துவக் காப்புறுதியின் பெறுமதியை 200,000 ரூபாவிலிருந்து 1 மில்லியனாக அதிகரிக்க அமைச்சரவைக்கு முன்மொழிவு செய்யப்படவுள்ளது.
நாட்டின் பொருளாதார நிலை காரணமாக அனைத்து மருத்துவச் செலவுகளும் அதிகரித்துள்ள நிலையில், காப்பீட்டுத் தொகை போதுமானதாக இல்லை என பல எம்.பி.க்கள் சபாநாயகரிடம் தெரிவித்துள்ளனர்.