Friday, January 30, 2026
31.1 C
Colombo
செய்திகள்உள்நாட்டுமீண்டும் எரிவாயு விலை அதிகரிக்கும் அபாயம்

மீண்டும் எரிவாயு விலை அதிகரிக்கும் அபாயம்

எதிர்காலத்தில் நாட்டில் சமையல் எரிவாயு விலை அதிகரிக்கும் நிலை காணப்படுவதாக நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் லசந்த அலகியவன்ன தெரிவித்துள்ளார்.

நேற்று (10) இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

300 ரூபாவாக இருந்த ஒரு மெட்ரிக் டன் எரிவாயு தற்போது 900 ரூபாயை தாண்டியுள்ளது. மூன்று தசாப்தங்களில் உலகின் மிக உயர்ந்த எரிவாயு விலை இன்று பதிவாகியுள்ளது.

தற்போது எரிபொருள் விலை அதிகரித்துள்ளதைப் போல, எதிர்காலத்தில் எரிவாயு விலை அதிகரிக்கும் நிலையை தவிர்க்க முடியாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles