Saturday, May 9, 2026
25 C
Colombo
செய்திகள்உள்நாட்டுயூரியா உர தொகை கப்பலிலிருந்து தரையிறக்கப்படுகிறது

யூரியா உர தொகை கப்பலிலிருந்து தரையிறக்கப்படுகிறது

பெரும் போகத்துக்கான 13,000 மெற்றிக் டன் யூரியா உரம் கப்பலிலிருந்து இன்று (28) தரையிறக்கப்படுகிறது.

யூரியா உர தொகையை தாங்கிய முதலாவது கப்பல் நேற்று (26) இரவு கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இதன்போது கலந்து கொண்டு உரையாற்றிய விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர, உலக சந்தையில் யூரியா உரத்தின் விலை அதிகரித்துள்ள போதிலும் இம்முறையும் ஒரு மூட்டை உரம் 10,000 ரூபாவிற்கு வழங்கப்படவுள்ளதாக தெரிவித்தார்.

கடந்த ஆண்டு பருவத்தில் வழங்கப்பட்ட யூரியா உர மூட்டைகள் சரியான எடையில் இல்லை என சிலர் குற்றம் சுமத்தினர்.

இம்முறை ஊடகங்கள் முன்னிலையில் எடையை எடைபோட்டதாகவும், ஒவ்வொரு உர மூட்டையும் சரியான நிறையுடன் காணப்படுவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles