நிறுவனங்கள் மற்றும் சங்கங்களின் பதிவுக் கட்டணத்தைத் திருத்தியமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, இந்த கட்டண திருத்தம் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
குறித்த வர்த்தமானி அறிவித்தல் அக்டோபர் 25 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது, நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் அனைத்து பதிவு கட்டணங்களும் இவ்வாறு அதிகரிக்கப்பட்டுள்ளன.
-கட்டண விபரங்கள் கீழே –
* பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் பதிவுக்கான கட்டணம் 4,000 ரூபாவில் இருந்து 4,600 ரூபாவாகவும்,
*பொது வரையறுக்கப்பட்ட நிறுவன பதிவுக்கான கட்டணம் 20,000 ரூபாவில் இருந்து 23,000 ரூபாவாகவும்
*சங்கப் பதிவுக் கட்டணங்கள் , 3,000 ரூபாவில் இருந்து 3,450 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது