Friday, September 20, 2024
29 C
Colombo
செய்திகள்உள்நாட்டுதலதா மாளிகைக்கு முன்பாக மீன்பிடித்த இருவர் கைது: 12 கிலோ மீன்கள் பறிமுதல்

தலதா மாளிகைக்கு முன்பாக மீன்பிடித்த இருவர் கைது: 12 கிலோ மீன்கள் பறிமுதல்

கண்டி, தலதா மாளிகைக்கு முன்பாக உள்ள வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலதா மாளிகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்த காவல்துறையினரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்களிடம் இருந்து 12 கிலோவுக்கும் அதிகமான மீன்கள் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் 29 மற்றும் 30 வயதுடைய அம்பிட்டிய மற்றும் பொல்கொல்ல பிரதேசத்தை சேர்ந்தவர்களென தெரியவந்துள்ளது.

இவர்கள் போதைப்பொருளுக்கு அடிமையானவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர்கiள கண்டி நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்துவதற்கு காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தெஹிவளையில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் காயம்

தெஹிவளை, கடவத்தை வீதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அவர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இனந்தெரியாத துப்பாக்கிதாரி...

Keep exploring...

Related Articles