Friday, December 19, 2025
23.9 C
Colombo
செய்திகள்உள்நாட்டுஅரச வங்கிகள் முறையை பலப்படுத்த வேண்டும் - ஜனாதிபதி

அரச வங்கிகள் முறையை பலப்படுத்த வேண்டும் – ஜனாதிபதி

நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கும் வங்குரோத்து நிலையில் உள்ள வர்த்தகங்களை வலுப்படுத்துவதற்கும் அரச வங்கிகள் முறையை பலப்படுத்த வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இளைஞர் பிரதிநிதிகளுடன் தொலைகாணொளி ஊடாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு இளைஞர்களின் ஆதரவு அவசியமாக உள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல கூடிய நிலைமை முதலில் ஏற்படுத்தப்பட வேண்டும்.

வங்குரோத்து நிலையில் உள்ள பொருளாதாரத்தை சிறந்த பொருளாதாரமாக மாற்றுவதற்காகவே தாம் ஜனாதிபதியாக பதவியேற்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles